வவுனியாவில் கடும் குளிரான காலநிலை : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

565

 
தற்போது வவுனியாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதுடன், வெப்பநிலை 20 செல்சியல் அளவில் காணப்படுகின்றது.

இக் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (01.12.2016) மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையானது வவுனியா மாவட்டத்திலுள்ள இரத்த அழுத்தத்திற்குட்பட்டவர்கள் (பிறசர்) தலையிடி, நெஞ்சு வலி என்பன ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் சூடான இடங்களில் இருக்குமாறும் சிறுவர்கள் குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் தலைக்கு தொப்பி (மப்ளர்), காலிற்கு கால் உறை என்பன அணிந்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறும்,

தேவையின்றி வெளியே சென்றுவருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அதேபோல வயதானவர்களும் கால நிலையினை தாங்கக்கூடியவாறு உடையணிந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ளவர்கள் எப்பொழுதும் சூடான இடத்தில் இருந்து பழக்கப்பட்டுள்ளதால் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இரண்டு தினங்கள் நீடிக்கும் எனவே பிறசர் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் எப்பொழுதும் சூடான நீரை அருந்துமாறும் இக்காலநிலை நீடிக்குமானால் மேலும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் மேலும் தெரிவித்தார்.

12 13 15 16 17