வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர்!!

516

alcacol

வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.