வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் பிரதான ஆண் தாதி ஒருவர் மீது மர்ம நபரொருவரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
ஆண் தாதியர் விடுதியில் இருந்து தனது கடமைக்கு செல்லுமுகமாக விடுதியை விட்டு வெளியில் வரும்போது முழுமையான தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்திருந்த மர்ம நபரொருவராலேயே மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட ஆண் தாதியான மினேஷ்(30) என்பவர் தன்னை தொடர் தாக்குதலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக வீதியில் ஓடி வைத்தியசாலையின் மதிலை கடந்து வைத்தியசாலைக்குள் நுழைந்துள்ளார்.
இத்தாக்குதல் எதனால் இடம்பெற்றதென்பது தெரியவில்லை. மேலும் பொலிஸில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.