தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந் நிலையில் வவுனியாவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
வவுனியாவிலிருந்து வடக்கிற்கான தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ள போதும் வடக்கை தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான தனியார் பஸ் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













