அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிஷெல் ஒபாமா ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டாரென ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா.
“நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிஷெல்லுக்கு அமைச்சு பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது.
இந்தநிலையில் அடுத்த தேர்தலில் மிஷெல் ஒபாமா போட்டியிடக்கூடும் என யூகங்கள் எழுந்தன. இது தொடர்பாக ‘ரோலிங் ஸ்டோன்’ என்ற பத்திரிகைக்கு ஒபாமா அளித்த செவ்வியின்போது அவர், “மிஷெல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.
நீங்கள் அறிந்தபடி மிஷெல் திறமை வாய்ந்தவர். அமெரிக்க மக்களுடன் அவர் வியக்கத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளார். ஆனால் அவர் அரசியலில் இருக்க வேண்டுமென விரும்புகிறார் என நான் தமாஷ் தான் பண்ண வேண்டும்” என கூறினார்.
ஏற்கனவே மிஷெலிடம் அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்டபோது அவர், “நான் ஒருபோதும் ஹிலாரியின் பாதையில் செல்ல மாட்டேன்” என குறிப்பிட்டமை நினைவுகூறத்தக்கது. ஹிலாரி, தனது கணவர் கிளிண்டனின் பாதையில் அரசியலில் குதித்தமை குறிப்பிடத்தக்கது.






