பூமியில் மனிதன் உருவாக்கிய பொருட்களின் மொத்த எடை 30 இலட்சம் கோடி டன்!!

844

globe

பூமியில் தான் வாழ்வதற்காக மனிதன் உருவாக்கிய அனைத்துப்பொருட்களின் மொத்த அளவு 30 இலட்சம் கோடி டன் (தொன்) என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

லீஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் வில்லியம்ஸ் தலைமையில் அமைந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

பூமியில் மனிதர்கள் உருவாக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரே சொல்லில் “டெக்னோஸ்ஃபியர்’ என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த டெக்னோஸ்ஃபியரில் வீடுகள், ஆலைகள், கணினி, செல்பேசி, வாகனம், கழிவுப்பொருட்கள் வரை மனிதன் உருவாக்கிய எல்லாமே அடங்கும்.

இவற்றின் தற்போதைய மொத்த எடை சுமார் 30 இலட்சம் கோடி டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சராசரியாக, பூமியின் ஒவ்வொரு சதுர மீட்டர் மேற்பரப்பிற்கும் 50 கிலோ எடை கொண்ட பொருளை மனிதன் உருவாக்கியுள்ளான்.
இன்னும் தொடர்ந்து உண்டாக்கி வருவதால் இது மேலும் கூடவே செய்யும்.

ஆனால், இயற்கையில் உள்ள இலை, மரம் போன்ற பொருட்கள் தாமாக மறுசுழற்சி செய்துகொள்வது போல, மனிதன் மறுசுழற்சி செய்வதில் மிகவும் பின்தங்கியுள்ளான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு முடிவுகளை “ஆந்த்ரோபோசீன்’ ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.