வெள்ளை நிறமாக மாற்றம் பெறும் பாதசாரிகள் கடவை
பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பொது நூலகத்திற்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.






