வவுனியாவில் மறைந்த இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக் கூட்டம்!!

880

kesto

கடந்த 25ம் திகதி மரணித்த கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான இந்த நூற்றண்டின் இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக்கூட்டம் நாளை 04.12.2016 ஞாற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை புதிய கலாசார விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இன் நிகழ்வில் கே.கே.அருந்தவராஜா(மேழிக்குமரன்-எழுத்தாளர்), வெ.மகேந்திரன்(தேசிய அமைப்பாளர் -புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சி), இரா.இராஜேஸ்வரன்(ஊடகவியலாளர்), க.மகேந்திரன்(தொழிற்சங்கப் பிரதிநிதி), பூ.சந்திரபத்மன் (சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு), தோழர் ஜீந்தீசன் (புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி) ஆகியோர் கலந்துகொள்வதுடன் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இவ் அஞ்சலி நினைவுக் கூட்டத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏட்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.