11 நாட்களாக விமானநிலையத்தில் தங்கியிருக்கும் சீனப் பிக்கு : மொழி தெரியாததால் சிக்கல்!!

589

p1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் கடந்த 11 நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

களனி பிரதேச பௌத்த விகாரைக்கு தொடர்புபட்டுள்ள மாநாயக்க பௌத்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக இலங்கை வந்துள்ளதாக குறித்த பிக்கு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், குறித்த பல்கலைக்கழகத்திற்கு பிக்குவை அனுப்பி வைத்தபோதிலும், அவர்கள் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பிக்கு சீன மொழியில் மாத்திரம் பேசுவதால், அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவது கடினமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, குறித்த பிக்குமார் வைப்பதற்கான கட்டிட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடையவில்லை எனவும் இதன்காரணமாக சீன நாட்டு பிக்குவை தங்க வைப்பதற்கான வசதிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பிக்குவை அனுப்பி வைக்க முயற்சித்த போதும், அவர் செல்ல மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

p2 p3