கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடல் கஸ்ரோவிற்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு புதிய ஜனநாயக மக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் வவுனியா நகரசபை விருந்தினர் மண்டபத்தில் இன்று(04.12.2016) அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் எழுத்தாளர் கே.கே.அருந்தவராஜா, புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன், தோழர் இரா.இராஜேஸ்வரன், தோழர் கா.மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன், தோழர் ஜீ ந்தீசன், புதிய சிந்தனை பெண்கள் வலையமைப்பின் தலைவி நி.பிரவீனா ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.
இவ் அஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் மறைந்த இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக் கூட்டம்!!