வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவமும், பெற்றோர் தினவிழாவும் 2016.12.02 வெள்ளிகிழமையன்று கல்லூரியின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் ம. தியாகராஜா அவர்களும், செ.மயூரன் அவர்களும் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். கிராம சேவையாளர் திருமதி.உ.பிரதீபா அவர்களும், வ/புளியங்குளம் ஆரம்ப. பாடசாலை அதிபர் திரு.சு.சிவராஜா, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(OIC), வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு.சுந்தரலிங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்க. செயலாளர் திரு.பா.ஜெகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.