அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி!!

857

apple-mirror

ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது.

அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணாடியை நம் முகம் பார்க்க பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் மினி கணணியாக செயல்படுகிறது.

இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கியுள்ளார்.

நம் கணணியில் இருப்பது போலவே ஐகான்கள் கண்ணாடியின் வல மற்றும் இடப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஐ.ஒ.எஸ், அண்ட்ரொய்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொடுத்திரையின் மூலம் இதனை பயன்படுத்த முடிகிறது.
இதன்மூலம் ஐகான்களை க்ளிக் செய்து மெசேஜ் படிப்பது, படம் பார்ப்பது, நியூஸ் பார்ப்பது, வீடியோ அமைப்புகள் போன்ற அனைத்து பயன்பாடுகளையும் உபயோகப்படுத்த முடிகிறது.

அப்பிள் ஐ.ஒ.எஸ் 10 இல் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரபேல் கூறுகிறார்.

நம் செல்போன் லொக் ஆவதை போன்று இந்த ஸ்மார்ட் கண்ணாடியும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு லொக் ஆகி விடும். லாக் ஆகி விட்டால் ஸ்மார்ட் கண்ணாடி சாதாரண கண்ணாடி போல மாறிவிடும்.