வியட்னாம் கடும் வெள்ளத்தில் 13 பேர் பலி!!

257

vietnam

வியட்னாமில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் இறுதி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலரும் நிர்கதிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள நிவாரப்பணிகளை பல நாடுகளிடமிருந்து எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மீட்பு பணிகளில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலை தொடர்ந்தும் நீடித்தால் வியட்னாமின் பாரிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.