வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 194வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

270

 

வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நினைவு தூபிக்கான மலர்மாலை அணியப்பட்டதுடன் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் நினைவுரையினை வழங்கியதையடுத்து இன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0190 dsc_0194 dsc_0197 dsc_0199 dsc_0201 dsc_0204 dsc_0206 dsc_0211 dsc_0213 dsc_0214 dsc_0217 dsc_0218 dsc_0219 dsc_0224 dsc_0231 dsc_0234 dsc_0237