வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவு தூபிக்கான மலர்மாலை அணியப்பட்டதுடன் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் நினைவுரையினை வழங்கியதையடுத்து இன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.