ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து இறுதிக்கட்ட சிகிச்சை : மரண செய்தியை மறுக்கும் அப்பல்லோ!!

714

jeya

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் இறுதிக்கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக மாலை 5.49 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் அப்பல்லோ தெரிவித்துள்ளது.