தரம் ஐந்து பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியரை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்காக குறைந்தபட்ச புள்ளிகள் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியரின் புள்ளிகளை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப் புள்ளி விபரங்கள் இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.