வவுனியாவில் 78 நிலையங்களில் 7716 மாணவர்கள் பரீட்சையில் தோற்றுகின்றனர்!!

457

ol

வவுனியா மாவட்டத்தில் 78 பரீட்சை நிலையங்களில் 7716 மாணவர்கள் க.பொ.த. சாதாரணத்தரப்பரீட்சையில் தோற்றுவதாக வவுனியா மாவட்ட பரீட்சைக்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளரும் வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளருமான எம்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களும் 78 பரீட்சை நிலையங்களும் இயங்கி வருகின்றது. இவற்றில் பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் 7716 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையில் சுமூகமான முறையில் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருவதாக தெரிவித்த அவர் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா மவட்டத்தில் முதன் முறையாக இம் முறை பரீட்சையில் வவுனியா வலுவூட்டல் வளாகத்தை சேர்ந்தவிசேட தேவையுடைய 5 மாணவர்களும் பரீட்சையில் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.