யாழ்ப்பாணத்திலுள்ள தனியாரின் விவசாயக் காணியிலிருந்து எறிகணைகள் மீட்பு!!

239

sell

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ்ப் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை காணி உரிமையாளர் முன்னெடுக்கும் போதே இந்த எறிகணைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எறிகணைகளை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இப் பகுதி 1996 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து 2012 ஆம் ஆண்டுவரை இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

2012 ஆம் ஆண்டு காலத்தில் இப் பகுதி விடுவிக்கப்பட்டு மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்திக்கது.