வவுனியா, பட்டாணிச்சிப்புளியங்குளம் மாற்றுத்திறனாளிகள் சங்கம், சமுர்த்தி சங்கம் என்பன இணைந்து 45ற்கும் மேற்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கு அனுசரணையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.மஸ்தான், தமிழ் விருட்சம் அமைப்பு என்பன வழங்கியிருந்ததுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பட்டாணிச்சிபுளியங்குளம் கிராம அலுவலகர், குடும்பநல உத்தியோகத்தர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் எஸ்.சஜாஸ், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் ஏ.ஏ.யரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை தமிழ் விருட்சம் அமைப்பின தலைவர் எஸ். சந்திரகுமார், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் கலந்து கொண்ட எஸ். சஜாஸ் பட்டரிச்சிப்புளியங்குளம் கிராம அலுவலகர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.