மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற ரீதியில் செல்வி ஜெயலலிதா பல பரிமாணங்களை கொண்டிருந்தார் என்பதுடன் அரசியலில் ஒரு பெண்ணாக தனித்து போராடி இந்த நிலையை அடைந்திருக்கிறார். தமிழ் நாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல உலகத்தமிழருக்கும் அவரின் இழப்பு பேரிழப்பு எனக் குறிப்பிட்டனர்.
நிகழ்வில் பொது அமைப்புக்கள், கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.