வவுனியாவில் இருவருக்கிடையே மோதல் : ஒருவர் கைது!!

571

fight

வவுனியாவில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புகையிரதநிலையத்திற்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் இருவருக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அருகே காணப்பட்ட போத்தலால் தாக்கப்பட்டு இருவரும் படுகாயமடைந்த நிலையில் 04.12.2016 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை நேற்றைய தினம் கைது செய்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று 07.12.2016 வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து வருகின்ற 20.12.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.