இன்றைய தினம் (07.12.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பொலிசாரால் விபத்துகளை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
“விபத்துகளற்ற வீதிகளை அமைக்க அனைவரும் ஒன்றிணைவோம்” எனும் தொனிபொருளில் புளியங்குளம் பொலிசாரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு புளியங்குளம் சந்தி வரையும் நடைபவனியாக சென்று முடிவடைந்தது.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தாதே, மஞ்சள் கடவைகளில் வாகனத்தை அவதானித்து செலுத்த வேண்டும், மது போதையில் வாகனம் செலுத்த வேண்டாம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தாதீர்கள். போன்ற பல கோசங்களை தாங்கியவாறாக இவ் விழிப்புணர்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பொதுமக்கள், போக்குவரத்து பொலிசார், பொலிசார் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.