இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு!!

356

indo

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை நேற்று சக்திமிகு நிலநடுக்கம் தாக்கியது. 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மாகாணம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பல கட்டிட நிர்மாணங்களும் முற்றாக தகர்ந்துள்ளன.

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதுடன் 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு அனர்த்த மீட்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சில வைத்தியசாலைகளில் போதிய இடவசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் வைத்தியசாலை வெளியக வளாகங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் காரணமாக இந்த மக்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.