கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பாக தேடப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு அமெரிக்க பொலிஸார் பேஸ்புக் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.
பென்சில்வேனியா மாநிலத்தின் பிரிட்ஜ்விலே நகர பொலிஸாரே இந்த உபாயத்தை பின்பற்றியுள்ளனர். வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, 32 வயதான ரொபர்ட் வட்கின்ஸ் என்பவர் பொலிஸாரால் தேடப்பட்டார். இதையடுத்து, அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், பேஸ்புக் மூலம் ரொபர்ட் வட்கின்ஸுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு பிரிட்ஜ்விலே நகர பொலிஸார் தீர்மானித்தனர். ‘சம்பவம் நடைபெற்ற இடத்தின் கண்காணிப்பு வீடியோ மூலம் உம்மை நாம் இனங்கண்டுள்ளோம்.
உம்மை நாம் கண்டுபிடித்துவிடுவோம்’ என தெரிவித்த பொலிஸார், ரொபர்ட் வட்கின்ஸின் சில புகைப்படங்களையும் வெளியிட்டனர். எனினும், நேற்று முன்தினம் வரை ரொபர்ட் வட்கின்ஸ் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.