கோடரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை!!

277

murder

பிபில – அரவாகும்புர பகுதியில் இன்று (07) கோடரியால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் போது 15 வயதுடைய அவரின் சகோதரர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர்களின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளைஞர்களது பெரியப்பாவினால் குறித்த இருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.