மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஊறணி பகுதியில் நேற்று (07.12) கார் ஒன்று குடை சாய்ந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.