தமிழக முதல்வரான ஜெயலலிதா நேற்று முந்தினம் இரவு 11.30 மணிக்கு காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வ அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் தமிழகம் முழுவதும் சோகக்கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகில் முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடல் மண்ணில் விதைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பல தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இதைத் தமிழகம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மக்களும் பார்த்து கண்கலங்கினர்.
இதைத் தொடர்ந்து தற்போது சிறுமி ஒருவர் ஜெயலலிதா இறந்ததை அறியாமல் கண்கலங்கி கதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், அச்சிறுமி ஜெயலலிதா எப்போ சரியாவார்கள் என்று கேட்டபடி தொடர்ந்து கண்கலங்கியதும், அதற்கு அருகில் இருக்கும் நபர் ஒருவர் சரியாகி விடுவார்கள், விரைவில் வந்துவிடுவார்கள் என கூறும் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.