வவுனியா பெரியதம்பனை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் இன்று (08.12.2016) காலை 9.30 மணியளவில் பொதுமக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர் இ.இந்திரராஐா, வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ப.சத்தியசீலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பவானி பசுபதிப்பிள்ளை, செட்டிக்குளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன், தாதிய உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப் பெரியதம்பனைக்குள கிராம சேவையாளர் பிரிவின் கீழ் 130 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த யுத்தகாலத்தின் போது இடம்பெயர்ந்த இக் கிராம மக்கள் 2010ம் ஆண்டு மீள் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.