ஆணுறுப்பை வெட்டி துண்டித்துக் கொண்ட நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

508

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆணு­றுப்பை வெட்டித் துண்­டாக்­கி­யுள்ளார். கடந்த 10 வரு­டங்­க­ளாக தான் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட­தால் ஏற்­பட்ட விரக்­தியே இதற்குக் காரணம் என அவர் தெரி­வித்­துள்ளார்.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த காசிராம் எனும் நபரே இந்த விப­ரீத நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளார். 37 வய­தான காசி ராமுக்கு 18 வரு­டங்­க­ளுக்கு முன் திரு­ம­ண­மாகி தனது மனை­வி­யுடன் குடும்பம் நடத்­து­கிறார்.

இத்­ தம்­ப­திக்கு ஒரு மகளும் இரு மகன்­களும் உள்­ளனர். இந்­நி­லையில், அண்­மை யில் மது­போ­தை­யுடன் தனது வீட்­டுக்கு வந்த காசி ராம், தனது ஆணு­றுப்பை துண்­டித்­துக்­கொண்டார்.

பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது மனை­வியை தான் அழைத்­த­தா­கவும் இதற்கு மனைவி மறுப்புத் தெரி­வித்­ததால், தான் ஆணு­றுப்பை வெட்­டிக்­கொண்­ட­தா­கவும் காசி ராம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 10 வருட கால­மாக தான் பாலியல் உறவில் ஈடு­ப­ட­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார். ஆனால், காசி ராம் கூறு­வதை அவரின் மனைவி மறுத்­துள்ளார். “அவர் ஒவ்­வொரு நாள் இர­விலும் மது­போ­தை­யுடன் வீட்­டுக்கு வருவார்.

நான் கூறு­வதை அவர் கேட்­ப­தில்லை. என்னைப் பற்றி அவர் அக்­கறை கொள்­வ­து­மில்லை” என காசி ராமின் மனைவி தெரி­வித்­துள்ளார். “அவர் மது­போ­தை­யுடன் வீட்­டுக்கு வந்­த­தா­லேயே உற­வுக்கு நான் மறுத்தேன்.

அவர் மீது நான் கடும் கோபத்தில் இருந்தேன். நான் எந்தத் தவறும் செய்­யாத போதிலும் தற்போது அவர் என் மீது குற்றம் சுமத்துகிறார்” எனவும் காசி ராமின் மனைவி தெரிவித்துள்ளார்.