பொய் வாக்குமூலம் அளித்து அப்பாவி ஒருவர் 5 மாதங்கள் சிறையில் : யுவதிக்கு ஒரு வருட சிறை!!

570

பொய் வாக்கு மூலம் அளித்­ததன் மூலம் அப்­பாவி நபர் ஒருவர் 5 மாதங்கள் சிறையில் வாடு­வ­தற்குக் கார­ண­மான யுவதி ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­ற­மொன்று ஒரு வருட கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

இங்­கி­லாந்தின் எசெக்ஸ் பிராந்­தி­யத்தில் 2014 ஆம் ஆண்டு பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­யின்­போது நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். திரு­டப்­பட்ட துப்­பாக்­கி­யொன்றை அவர் வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

அதன் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது லீ குட்செல் எனும் மற்­றொரு நபரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­தனர்.

இரண்­டா­வது நபர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டதை அறிந்த ஹேலி கார்ட்டர் எனும் யுவதி, அந்­ ந­ப­ருக்கு எதி­ராக பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்தார்.

இதனால், லீ குட்செல் 5 மாதங்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்தார். ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்ட நபர் மீதான வழக்கை பொலிஸார் கைவிட்­டனர். எனினும், லீ குட்­செ­லுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது ஹேலி கார்ட்டர் சாட்­சியம் அளிப்­ப­தற்கு முன்­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் புத்­தாண்டு பிறப்புக் கொண்­டாட்­டத்­தின்­போது லீ குட்செல் அப்­பாவி என தனது நண்பர் ஒரு­வ­ரிடம் 23 வய­தான ஹேலி கார்ட்டர் கூறு­வதை அவரின் நண்பர் வீடி­யோவில் பதி­வு­செய்­து­கொண்டார்.

இந்த வீடியோ நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஹேலி கார்ட்­ட­ருக்கு எதி­ராக வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. இதில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட ஹேலி கார்ட்டர் 18 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் 1,500 ஸ்ரேலிங் பவுண் அப­ராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதி­மன்றம் கடந்த ஒக்­டோபர் மாதம் தீர்ப்­ப­ளித்­தது.

ஆனால், இத் ­தண்­டனை போது­மா­ன­தல்ல எனக் கூறி வழக்குத் தொடுநர்கள் மேன்முறையீடு செய்தனர். இதையடுத்து ஹேலி கார்ட்டருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.