அக்காவை கருணைக் கொலை செய்த பாசக்கார தம்பி!!

355

MURDER6

தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 77 வயது அக்காவை 67 வயது தம்பி கருணைக் கொலை என்ற பெயரில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

77 வயது மூதாட்டியான பர்வதம் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் தனது மகளை தன் தம்பியான மூர்த்திக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூர்த்தியின் மனைவி புஷ்பா, பர்வதத்தின் மகன்கள் தமிழ்செல்வன், அமுதன், ராஜு உள்பட அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். மூர்த்தி, பர்வதம் இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த பர்வதத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட மூர்த்தி வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வாழை தோட்டத்தில் சுமார் 2 அடி ஆழத்திற்கு குழியை தோண்டி அதில் பர்வதத்தை புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஊர் திரும்பிய உறவினர்கள் பர்வதம் எங்கே என்று கேட்டதற்கு தனக்கு தெரியாது என்றும் அதிகாலை எழுந்து பர்வதம் வெளியே சென்று விட்டார் என்று பொய் கூறியுள்ளார் கொலையாளி தம்பி.

சந்தேகமடைந்த உறவினர்கள் மூர்த்தியிடம் தீவிரமாக விசாரித்த போது தனது சகோதரி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வருவதை பார்த்து தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் எனவே கழுத்தை நெரித்து கருணைக்கொலை செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.