சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டம்!!

508

sachin-trophy

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை அளிக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் 200வது டெஸ்ட் ஆடிய பிறகு ஓய்வு பெற்றுவிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.

இதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று அவரது கையில் கொடுத்து பிரமாதமாக பிரியாவிடை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்க உள்ளது.

இதுவே சச்சினுக்கு கடைசி சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடராக இருக்கும் என்பதால் அவருக்குக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்து சிறப்பாக வழியனுப்பி வைக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் தயாராகி வருகின்றனர்