வவுனியாவில் நடுவீதியில் அமர்ந்த பெண் பொலிசாரால் அதிரடியாக கைது!!

282

 
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியின் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று (09.12.2016) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்..

பெண்னொருவர் தாக்கியதாக தெரிவித்து மற்றுமொரு பெண்னொருவர் நடுவீதியில் அமர்ந்தமையினால் ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தனது வீட்டில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக இளம் பெண்னொருவரை மற்றுமொரு பெண் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த இடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண் ஏ9 விதியின் நடுவில் அமர்ந்து தனக்கு நியாயம் கோரியுள்ளார்.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் போக்குவரத்து பணியை சீர் செய்திருந்தனர்.

பல மணி நேரங்கள் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பெண்னை பொலிசார் அதிரடியாக கைது செய்தபோது வர மறுத்த பெண்னை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வீதியில் அமர்ந்த பெண்ணினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.