வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு!!

394

 
வவுனியா புதிய நகரசபை மண்டபத்தில் இன்று (09.12.2016) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

“ஏனையோரின் உரிமைகளுக்காக இன்றே எழுவோம், குரல் கொடுப்போரின் ஒர் அனுபவப்பகிர்வு” எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இன் நிகழ்வில் எம்.ஆர்.பிரியதர்சன (பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வவுனியா), பீ.என்.சிங்கம் ( மாற்றம் பவுன்டேஷன், வவுனியா), முகமட் மஜீத் ஜென்சிலா (சங்கமி பெண்கள் ஒன்றியம், முல்லைத்தீவு), கே.எம்.குணதிலக (தவிசாளர் இணக்கசபை, வவுனியா தெற்கு), வன்னிமாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் விருந்தினர் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல், கலை நிகழ்ச்சிகள், மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.