வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
அகில இலங்கை பாரத ஜயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களுக்கும் வவுனியா மாவட்ட குருசாமி மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.













