வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது!!

288

வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி ஒருவர்நேற்று இரவு 7 மணியவில் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து கலாபோபஸ்வேவ பகுதி நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றுஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த போது உமாமகேஸ்வரன் சந்தியில் பயணித்த இளைஞர்ஒருவருடன் மோதியது. இருப்பினும் குறித்த இளைஞன் சுதாகரித்து கொண்டதால் காயங்கள் இன்றி தப்பித்துக்கொண்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் கூடியஇளைஞர்கள் குறித்த பேரூந்தினை மறித்து மது போதையில் அப் பேரூந்தின் சாரதிஇருப்பதாக தெரிவித்து சாரதியை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பானவிசாரணைகளை மேற்கொண்டதுடன் பேரூந்தினை வவுனியா பொலிஸ்சுக்கு கொண்டுவர முயற்சித்த போது இளைஞர்கள் அதற்கு இடமளிக்காது பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த குறித்த சாரதியை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

இதனால்பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் அப்பகுதியில் முரண்பாடு ஏற்பட்டது.

சாரதியை கைது செய்வதாகவும், பேரூந்தை வவுனியா பொலிஸ்சுக்கு கொண்டு செல்வதாகபொலிசார் உறுதியளித்ததையடுத்து இளைஞர்கள் அதற்கு அனுமதியளித்தனர்.

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் அங்கு குழப்பம் ஏற்படாத வகையில் இவ் இளைஞர்களை வீதியில் இருந்துவிரட்டியடித்தனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸ்சில் பேரூந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.