தம்பியை கொலை செய்து புதைத்த அண்ணன் : அதிர வைக்கும் பிண்ணனிக் காரணம்!!

1065

தமிழகத்தில் தம்பிக்கு மயக்கமருந்து கொடுத்து அண்ணனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (29). டிரைவரான இவர் தம்பி தனபாண்டியனிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 வது தம்பியான சுந்தரபாண்டியன், 27, அவரை கண்டிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருவருக்கு நடந்த வாக்குவாதம் முற்ற இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது சுந்தரபாண்டியன், அவருடைய மனைவியை கண்மூடித்தனமாக கடித்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியராஜ், கயிற்றால் அவரின் கை,கால்களை கட்டி அறையில் பூட்டியுள்ளார். சுந்தரபாண்டியன் தொடர்ந்து சத்தம் போட அவருக்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலே மயக்கமடைந்துள்ளார். பின்னர் பாண்டியராஜ், அவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் பாண்டியராஜ் நாடகமாடியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது உடலை புதைத்துள்ளனர்.

அவருடைய தாயார் ராஜாமணி கேட்ட போது, தகராறில் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவரின் தாயார் காவல்நிலையத்தில் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் புதைத்த இடத்தில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.