பிரித்தானியாவில் அனாதை இல்லத்திற்கு அனுப்பட்ட சகோதரர்கள் நான்கு பேர் 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒன்றிணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் டேவன் பகுதியில் கடந்த 1956 ஆம் ஆண்டு தாயார் ஒருவர் தமது ஏழ்மை நி்லையை கருத்தில் கொண்டு தனது 4 மகன்களை அங்குள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த காப்பகம் அந்த நான்கு சகோதரர்களையும் வேறு வேறு காப்பகங்கலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நாளடைவில் குறித்த சகோதரர்களுக்கு தொடர்பு எதையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போனது.
இதனிடையே இவர்களின் தாயாரும் தமது 37-வது வயதில் அதிர்ச்சிகரமாக மரணமடைந்துள்ளார். இதனால் சகோதரர்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மிகவும் அரிதானதாக மாறியது. ஆனாலும் நம்பிக்கை கைவிடாத சகோதரர்கள் நான்கு பேரும் தங்களது எஞ்சிய சகோதரர்களை தங்களால் இயன்ற முறையில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சால்வேஷன் ஆர்மி துணையுடன் நான்கு சகோதரர்களில் ஒருவரான டேவ் மோரிஸ் தமது சகோதரர்கலில் ஒருவரான கீத் மோரிஸ் என்பவரை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து எஞ்சிய இருவரையும் தேடும் பணிகளை குறித்த சகோதரர்கள் இருவரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் சகோதரர்கள் நான்கு பேரும், சிறுவயதில் ஒன்றாக கால்பந்தாடிய பிளைமவுத் விளையாட்டு அரங்கில் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதில் 3 சகோதரர்கள் குறித்த மைதானத்தில் 1950களில் கால்பந்து போட்டிகள் நடைபெறும் நாளில் ஆட்ட இடைவேளையின் போது இசைக்கருவிகள் வாசித்துள்ளனர்.








