டென்மார்க்கில் தமிழ் மாணவி ஒருவர் சிகிச்சை பலனியின்றி உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 வயதான சட்டத்துறை மாணவி செல்வி. மதுரா சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சட்டத்துறையில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று அதிக புள்ளிகளை மதுரா பெற்றுள்ளார்.
படிப்பில் சிறந்த விளங்கிய குறித்த மாணவி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் உலக வாழ் தமிழர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திடிரென அவர்களின் உயிர் பிரிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதேவேளை மதுரா சிவகுமாரின் இறுதிக்கிரியைகள் டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








