மீண்டும் மலைநாடாக மாறும் கிளிநொச்சி : அதிகரிக்கும் பனி மூட்டம்!!

523

 
அதிகரிக்கும் பனிபொழிவினால் கிளிநொச்சியில் விவாசாயிகள் மற்றும் நகர்ப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் என்றால் பெரும் மழைகாலம் என்று அனைவருக்கும் தெரிந்த விடையமாகும். ஆனால் இயற்கை அன்னை மாற்றம் ஒன்றை தந்துள்ளது. மலைநாடுகளின் இடங்கள் போன்று தற்போது கிளிநொச்சியும் கடும் குளிருடனும் கடுமையான பனிப்பொழிவுடன் காணப்படுகின்றது.

இதனால் விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கிளிநொச்சி நகர் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பனியினால் மூடிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் சுமார் 11.00 மணிவரையும் கடும் குளிருடன் கூடிய பனி பொழிவு மிக அதிகமாக காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனி பொழிவு காரணத்தால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

பருவமழை பெய்துதுவரும் பட்சத்தில் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும் நிலைக்கு போய்விடும் என்று விவசாயிகள் அங்கலாய்க்கிறார்கள்.