வவுனியாவில் வீதியில் அமர்ந்து இடையூறு ஏற்படுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

542

 
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் நேற்று (09.12.2016) பிற்பகல் 2 மணியளவில் பிரதான யாழ் வீதியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த குறித்த பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (09.12.2016) மாலை பொலிசார் அனுமதித்ததுடன் மருத்துவ அறிக்கையினை வைத்தியர்களிடம் கோரியுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று 10.12.2016 தெரிவித்தனர்.

குறித்த பெண் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.