வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைப்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

594

 
வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் மீது நேற்று இரவு (10.12.2016) இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா இறம்பைக்குளம், யோசப்வாஸ் வீதியில் அருகே வைக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் மீது நேற்று இரவு 10.45 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சொரூபம் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் சொரூபத்தினைப் பார்வையிட்டதுடன் வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.