சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற தேசத்தைக்கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் இறுதி நிகழ்வு நேற்று (10.12.2016) காலை 10.00 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இடம்பெற்றது.
அன்பிற்கும் நட்பிற்குமான அமைப்பின் உறுப்பினர் சிவராசா பிரதீப் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.















