வவுனியாவில் மருத்துவச்சான்றிதழ் பெறும் அலுவலகம் சனிக்கிழமையிலும் திறந்திருக்கும்!!

1005

 
வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு மருத்துவச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் அலுவலகம் பிரதி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.

2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூபா 25000 தண்டம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து பெருமளவான இளைஞர் யுவதிகள் முண்டியடித்தக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு காத்திருப்பதைக்காணக்கூடியதாக இருந்தது.