துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!!

509

மீடியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை 45 வயதான பழக்கடை உரிமையாளர் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் படபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மீடியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.