மகனின் கன்னக்குழியைப் பார்த்து பொறாமை கொண்ட பெண் செயற்கையாக முகத்தில் துளையிட்டுக்கொண்டார்!!

570

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், செயற்கையாக கன்னத்தில் குழி ஏற்படுத்துவத ற்காக பல லட்சம் ரூபாவை செலவிட்டு தனது முகத்தில் துளையை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் லின்கன்ஷயர் பிராந்தி யத்தைச் சேர்ந்த 44 வயதான ஏ.ஜே.வேய்ர் எனும் இப் பெண், 11 வயதான தனது மக­னின் கன்னக் குழியை பார்த்து பொறாமை கொண்டாராம்.

மகனின் கன்னத்திலுள்ளதைப் போல், தனது முகத்திலும் குழியை ஏற் படுத்திக்கொள்வதற்கு அவர் விரும்பினார்.

இயற்கையாக இதை செய்ய முடியாத நிலையில், சத்திரசிகிச்சை மூலம் இதை செய்வதற்கு அவர் தீர்மானித்தார்.

இப்படி செய்ய வேண்டாம் என வேய்ரை அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிவுறுத்தினர். எனினும் அவர் அந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்தார்.

சத்திரசிகிச்சை மூலம் அவரின் கன்னத்தில் துளை ஏற்படுத்தப்பட்டு, தையல் இடப்பட்டது. கன்னக்குழியை ஏற்படுத்த வேண்டும் என தான் 10 வருடங்களாக காத்திருந்ததாக இப் பெண் தெரிவித்துள்ளார்.