வவுனியாவில் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!

309

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்றும், ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காகச் சென்ற பொதுமக்கள் ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையறிந்து வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டபோது வவுனியாவில் மடடுமல்ல அனைத்துப்பாகங்களிலும் தற்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வரி சுமையற்ற பொருட்களை கொள்வனவு செய்து விற்பனைக்கு அனுப்பியுள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.