வவுனியா பம்பைமடுவில் விபத்து :  ஒருவர் படுகாயம்!!

478

 
வவுனியா பம்பைமடுவில் இன்றைய தினம் (12.12.2016) இரவு 7.00 மணியளவில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து பம்பைமடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிளும் பம்பைமடுவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பட்டா வாகனமும் பம்பைமடு சந்திக்கு அருகாமையிலுள்ள வளைவில் சென்று கொண்டிருக்கும் போது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளானதால் அவர் உடனடியாக அருகில் இருந்தவர்களால் பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு அழைப்பினை மேற்கொண்டு அம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவ்விடத்துக்கு வருகைதந்த பூவரசங்குளம் போக்குவரத்துப் பொலிசார் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.