ஏழாலை தெற்கு – மயிலங்காடு பகுதியில் உள்ள தோட்ட வளவினுள் இருந்து, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (12.12.2016) வளவினை துப்புரவு செய்த உரிமையாளர், கைக்குண்டு இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.