75 ஆண்டுக்குப் பின் புயலின் கோரத்தாண்டவம் : இன்றும் தொடரும் என எச்சரிக்கை!!

598

அதிதீவிர வர்தா புயல் சென்னையைத் தாக்கி கரையை கடந்த நிலையிலும் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும்.

இதேவேளை, இப்படி ஒரு இயற்கை சீற்றம் வரும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது.

பஞ்சாங்கம் கணித்தது போலவே டிசம்பர் 11இல் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னை வளைத்து வளைத்து சூறையாடியது.

டிசம்பர் இறுதியில் எப்படியிருக்குமோ? வர்தா புயலின் தாக்கமே இப்படி இருக்கும் நிலையில் இதைவிட ஒரு கொடூரமான தாக்குதல் சென்னைக்கு வந்தால் இதை அடுத்து அந்த தாக்குதலின் விளைவிற்கு இலங்கையும் முகம் கொடுக்க வேண்டும் என்பதும் உண்மை.

இதேவேளை, தமிழகத்தில் வர்தா புயல் பாதிப்பை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.